states

img

இந்துத்துவா வெறியர்கள் பற்ற வைத்த நெருப்பு: மாணவர்கள் “நெற்றிப் பொட்டை” அழிக்க வற்புறுத்தல்

விஜயபுரா (கர்நாடகம்), பிப்.19- இந்துத்துவா வெறியர்கள் பற்ற வைத்த நெருப்பால் மாணவர்-மாணவிகள் “நெற்றிப் பொட்டை” அழிக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா இந்தி நகரத்தில் நெற்றியில் பொட்டு வைத்துச் சென்ற காரணத்திற்காக மாணவர்கள் கல்லூரிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர், பொட்டை அழித்துவிட்டு உள்ளே செல்லும்படி கல்லூரி  நிர்வாகம் மாணவர்களை கேட்டுக் கொண்டது. ஹிஜாப், காவி சால்வை போன்றே நெற்றியில் வைக்கப்படும் பொட்டும் பிரச்ச னையை கிளப்புவதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரண மாக, மாணவர், ஆசிரியர்களிடையே வாக்கு வாதம் முற்றியது. கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஹிஜாப் மற்றும் காவி துப்பட்டா அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நெற்றி யில் பொட்டு வைக்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், கர்நாடக அரசின் உத்த ரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், நெற்றியில் பொட்டு வைப்பது, கையில் வளையல் அணிந்து கொள்வது, சீக்கி யர்களின் தலைப்பாகை, ருத்ராக்ஷம் அணிந்து கொள்வதை போல ஹிஜாப் அணிவதும் மத நடைமுறை என வாதிட்டார். இப்பிரச்சனை குறித்து வியாக்கியதனம் செஙயம ஸ்ரீ ராம் சேனை நிறுவனர் பிர மோத் முத்தாலிக், பொட்டு மதச் சின்னம் அல்ல. இது நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மதச் சின்னங்கள் குறித்த கல்வித் துறை சுற்றறிக்கையின்படி இதைத் தடை செய்ய முடியாது. என்றார்.  

மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் சார்பில் ஆஜரான மனுதாரர் டாக்டர் வினோத் குல்கர்னி, “இடைக்கால நிவாரணத்தின் ஒரு பகுதியாக, முஸ்லிம்களுக்கு மிகவும் புனித மான நாளான வெள்ளிக்கிழமை, ஜும்ஆ நாளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந் திட அனுமதிக்க உத்தரவிட வேண்டும். புனித ரம்ஜான் மாதம், விரைவில் வரப்போகிறது”. என்றார். முஸ்லிம் பெண்கள் எந்த சீருடையை யும் அணிவார்கள் என்ற அவரது கோரிக்கை முரணானது என்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி சுட்டிக்காட்டியபோது, டாக்டர் குல்கர்னி, “ஹிஜாப் சீருடையின் ஒரு பகுதி”. ஹிஜாபை தடை செய்வது “குரானை தடை செய்வதற்கு சமம்” என்றார், அதற்கு பதிலளித்த நீதிபதி ரிது ராஜ், “அது தொலைவில் உள்ளது” என்றார். ஹிஜாப் குரானால் பரிந்துரைக்கப் பட்டதா என்ற விவாதம் நடந்து வருகிறது. குர்ஆனில் இது எங்கு கூறப்பட்டுள்ளது என்பதைக் காட்ட முடியுமா என்று தலைமை நீதிபதி கேட்டதற்கு, எனது வேண்டுகோள் வெள்ளிக்கிழமைகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் ரம்ஜான் பண்டிகைக் காலத்திலும் அனுமதிக்க வேண்டும் என்றார்.